சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி

அரச சேவையில் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வுக்கு ஏதுவாக உள்ள பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதுவரை காலமும் மொழிப்புலமை பரீட்சை எழுத்து மூலம் மற்றும் வாய்மூலமாக பரீட்சை நடத்தியே சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு தீர்மானிக்கப்படுகின்றது.

இந்த பரீட்சை முறை பாரிய நெருக்கடியை அரச சேவையில் ஏற்படுத்தியிருப்பதாகவும், பல ஊழியர்கள் சேவைக் காலத்திற்குள் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பை பெறமுடியாமலிருக்க தடையாக இருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்துள்ளன.

இந்த நிலையில் குறிப்பிட்ட மணித்தியால பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி தற்போதுள்ள முறையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அரச சேவை, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.