பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு  நேற்று (திங்கட்கிழமை)  நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில்  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு தரப்பு கலந்துரையாடலின் பின்னர் உயர்ஸ்தானிகருக்கு சபாநாயகர் தேனீர் விருந்துபசாரமொன்றையும் வழங்கினார்.