நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்றுறுதியானது.

லெபனானில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் தொத்த எண்ணிக்கை 3362 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 139 ஆக குறைவடைந்துள்ளது.