உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)

உலகின் முதல் கோடீசுவரர் என்று பெயர் பெற்ற ராக்பெல்லர் (செப்.29- 1916)

ஜான் டி. ராக்பெல்லர்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

 

ஜான் டி. ராக்பெல்லர்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். ஸ்டேண்டர்டு ஆயில் என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.

 


1916-ம் ஆண்டு செப். 29-ந்தேதி உலகின் முதல் கோடீசுவரர் என அறிவிக்கப்பட்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1941 - உக்ரைனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் கொல்லப்பட்டனர். * 1962 - கனடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது. * 1971 - அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது. * 1998 - இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது. * 2003 - சூறாவளி 'ஜுவான்' கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.