யாழ்ப்பாணத்தில் மதம் மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு ; விசாரணை கோரிக்கை
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் தொடர்பாக மதம் மாற்றம் மற்றும் பண மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சில நபர்களின் உறவினர்கள், குறித்த யுவதியின் நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, 64 வயதுடைய ஒருவர் பணம் மற்றும் பொருட்களை வழங்கிய பின்னர் மதம் மாற்றம் செய்யத் தீர்மானித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.