கிறிஸ் கெய்ல்-க்கு இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு: கேஎல் ராகுல்

கிறிஸ் கெய்ல்-க்கு இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு: கேஎல் ராகுல்

யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்-க்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க முடியாதது மிகவும் கடினமான முடிவு என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் என்றாலே சற்றென்று நினைவுக்கு வரும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். பேட்ஸ்மேனாக என்னென்ன சாதனைகள் படைக்க முடியுமோ? அந்த சாதனைகள் எல்லாம் படைத்திருப்பார். தற்போது வயது கடந்த நிலையில், உடற்தகுதி பிரச்சனையால் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பெறவில்லை. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர்தான் விளையாட முடியும். வேகப்பந்து வீச்சாளர்களில் காட்ரெல், நீசம், பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் விளையாடினர். 

முதல் ஆட்டத்தில் காட்ரெல், ஜோர்டான், மேக்ஸ்வெல், பூரன் விளையாடினார்கள். கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் மேக்ஸ்வெல் அல்லது பூரன் ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் கெய்லை விளையாட வைக்க முடியாமல் இருப்பது மிகவும் கடினமான முடிவு என்று அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘கிறிஸ் கெய்ல் டி20-யில் மகிப்பெரிய மேட்ச் வின்னர். இப்படிப்பட்ட மேட்ச் வின்னரை விளையாடாமல் இருக்க வைப்பது எங்களுக்கு கடினமான முடிவு. லாக்டவுன் காலத்திற்குப்பிறகு அவர் பயிற்றி மேற்கொண்டு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறார்.

அவர் சிறந்த முறையில் பந்தை அடித்து வருகிறார். தொடரின் சில இடங்களில் அவர் எங்கள் அணியின் முக்கியமான நபராக இருப்பார்’’ என்றார்.