புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பிரதமரிடம் கையளிப்பு!

புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பிரதமரிடம் கையளிப்பு!

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மனினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் நேற்று(வியாழக்கிழமை) பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே குறித்த நாணயத்தாள் கையளிக்கப்பட்டது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.