மீனவர் விவகாரம்- மஹிந்தவுக்கும் மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

மீனவர் விவகாரம்- மஹிந்தவுக்கும் மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

இருநாடுகளின் மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தல்,  இருநாடுகள் மத்தியிலான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் வட.பகுதி மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதன்போது முக்கியமாக சுட்டிக்காட்டுவார் என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 26ஆம் திகதி மீனவர்கள் குழுவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.