இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் தீவிரம்

இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் தீவிரம்

கண்டி - பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில்இ மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.

இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கிய நிலையில்இ அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது இடிந்து விழ்ந்து அனர்த்ததிற்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் இதுவரை 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது

அத்துடன் மேலும் 2 பேரை காணவில்லை என்பதுடன் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.