நுவரெலியாவில் திடீரென பற்றிய தீ! முற்றாக சேதமடைந்த கடைகள்

நுவரெலியாவில் திடீரென பற்றிய தீ! முற்றாக சேதமடைந்த கடைகள்

நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இட்ம்பெற்ற தீவிபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் (19.09.2020) நள்ளிரவு 01.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, கோழிக் கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகியன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.