அமெரிக்காவில் மர்மம்! கொத்தாக உயிரிழக்கும் பறவைகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் மர்மம்! கொத்தாக உயிரிழக்கும் பறவைகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் மர்மமான முறையில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ், கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த தவிட்டுக் குருவிகள், ராபின்கள், சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவைகளே இவ்வாறு இறந்து வருகின்றன.

கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் எரியும் காட்டுதீயினால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் காரணமாக இப் பறவைகள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும் பறவைகளின் இறப்புக்கான சரியான காரணம் இது வரை வெளியாகவில்லை.

பல்வேறு இடங்களிலும் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் கொத்து கொத்தாக இறந்து விழுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.