புதுவிதமான கிரிக்கட் போட்டிகள் இடம்பெறுகின்றன..!
உலகளாவிய ரீதியாக தற்போது புதுவிதமான கிரிக்கட் போட்டிகள் இடம்பெறுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளர்ர்.
பார்வையாளர்களற்ற கிரிக்கட் போட்டிகளே தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் தொடர்கள் மற்றும் இந்தியன் ப்றீமியர் லீக் போட்டிகள் என்பன பார்வையாளர்கள் அற்ற நிலையிலேயே இடம்பெறுகின்றன.
இது முற்றிலும் மாறுபட்ட ஒரு முறையாகவே உள்ளது.
எனினும், கிரிக்கட் விளையாட்டு ஏதேனும் வீழ்;ச்சிப் பாதையில் பயணிக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.