கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 182 ஆக குறைவடைந்துள்ளது