எதிர்வரும் 34 மணித்தியாலங்களுக்கு மழை..!

எதிர்வரும் 34 மணித்தியாலங்களுக்கு மழை..!

எதிர்வரும் 34 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.