கண்டி நில அதிர்வு விவகாரம்- விக்டோரியா நீர்த்தேக்க அணை தொடர்பில் அவதானம்

கண்டி நில அதிர்வு விவகாரம்- விக்டோரியா நீர்த்தேக்க அணை தொடர்பில் அவதானம்

கண்டியில் - திகன உள்ளிட்ட பல இடங்களில் அண்மையில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டிருந்தது.

பூமியின் உட்புறத்தில் சுண்ணாம்பு அடுக்குகளுக்கு இடையில் உள்ள உந்துதலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக இது குறித்து ஆராய்ச்சியை முன்னெடுத்திருந்த புவியியலாளர்கள் குழு தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அது குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் வசந்த எஹெலபிடிய தெரிவித்தார்