படகு விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படை

படகு விபத்தில் சிக்கிய இரண்டு மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படை

களுத்துறை-எலபடவத்த பிரதேசத்தில் கடற்றொழிலுக்காக சென்ற மீனவப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் களுத்துறை-நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த சம்பவம் இன்று அதிகாலை (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.