மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் விபத்து - 3 பேர் காயம்

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் விபத்து - 3 பேர் காயம்

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டியுடன், உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தினர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.