பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 9 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 176 ஆக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.