காவல் துறை உத்தியோகத்தரால் பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்...!

காவல் துறை உத்தியோகத்தரால் பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்...!

பாதசாரிகளுக்கான வீதிக்கடவை ஊடாக வீதியை கடக்க முயற்சித்த பெண்ணை உந்துருளியில் மோதி தப்பிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - கண்டி வீதியில் கிரிபத்கொடை நகருக்கு அருகில் நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் 59 வயதான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

தனது மகனுடன் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முயற்சித்த வேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் உந்துருளியின் இலக்க தகடு வீதியில் கிடந்துள்ளமைக்கு அமைய குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர் கொழும்பு - பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.