நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்று ஆறு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், கட்டார், பஹ்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட தலா ஒருவருக்கும், கந்தகாடு புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.

இதற்மைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 121 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 191 ஆக குறைவடைந்துள்ளது.