நீதி அமைச்சரின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை

நீதி அமைச்சரின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நெரிசலைக் குறைப்பதற்காகவும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை நீதி அமைச்சர் நியமித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவுறுத்தியுள்ளார்.