இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்..!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 ஆயிரத்து 408 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மேலும் 836 பேர் உயிரிழந்ததோடு மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 23 லட்சத்து 38 ஆயிரத்து 35 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்

கடந்த நாட்களில் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வேகம் குறைவடைந்திருந்த போதிலும் தற்போது அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது,

அத்துடன் சர்வதேச ரீதியில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தொற்றுறுதியான ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 545 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.