புதிய தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார் நியமனம்
புதிய தேர்தல் ஆணையாளராக முன்னாள் நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் அசோக் லாவசா எதிர்வரும் 31ஆம் திகதி இராஜினாமா செய்யவுள்ளமையினால் அப்பதவிக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இவ்விடயம் தொடர்பான அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து பின்னர் நிதித்துறைச் செயலாளராகவும் ராஜீவ் குமார் பணியாற்றியுள்ளார்.
மேலும், சிறிய நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடனுதவி வழங்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசுக்கு வடிவமைத்து கொடுத்ததில் ராஜீவ் குமார் பெரும் பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.