பாடசாலை புத்தகங்களுக்கான வற் வரி நீக்கப்படும் - ஜனாதிபதி

பாடசாலை புத்தகங்களுக்கான வற் வரி நீக்கப்படும் - ஜனாதிபதி

பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் ஜனாதிபதி மேலும் கூறினார்.