கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று வியாழக்கிழமை (27( மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

மேலதிக விசாரணை

குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.

கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி | Young Man Dies After Mobile Phone Explodes

இந்த நிலையில், கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.