அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ எதிராக ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பல மாணவர்கள், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் இணையத்தில் பரவப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு பின் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அவர்களை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அமைச்சின் எச்சரிக்கை 

இந்நிலையில், பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதி பெறாமல் மாணர்வகளின் கருத்துக்களைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Viral Videos Of Grade 5 Scholarship Students

மேலும், இதுபோன்ற காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, சிறுவர்கள் உரிமை மீறல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.