வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மாணவி சாதனை

வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மாணவி சாதனை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று  (31) நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரியின் ஈஷானி மனோதா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.