நாட்டில் விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு: பயணிகளுக்கு பாரிய சிக்கல்
உலகச் சந்தையில் விமான எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப, உள்நாட்டிலும் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மேலாண் இயக்குனர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கடந்த 27ஆம் திகதி 93.57 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பேரல் விமான எரிபொருளின் விலை, தற்போது 209 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, உள்நாட்டில் விமானப் பயணச்சீட்டுகளின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.