இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
அதன்படி ஏப்ரல் 14 – 15 இற்குள் முதலாவது கப்பலும், ஏப்ரல் 17 – 18 இற்குள்இரண்டாவது கப்பலும், ஏப்ரல் 21 – 22 இற்குள் மூன்றாவது கப்பலும், ஏப்ரல் 29 – 30 இற்குள் நான்காவது கப்பலும் வரவுள்ளது.
இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரவுள்ளன.
குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக் காலத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.