யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம்(08) காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.
நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் விலை! வெளியானது அறிவிப்பு
உடற்கூற்று பரிசோதனை
பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்தவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட இளவாலை காவல்துறையினர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
