வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று (07.03) காலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை வான் ஒன்றில் வந்த நபர்கள் வழிமறித்து வாளால் தாக்கியுள்ளனர்.

 இதனையடுத்து குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர்களை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம் | 2 Injured In Sword Attack On Vehicle In Vavuniya

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.