விலை உயர்வை தாங்க தயாராகுங்கள் : இலங்கை மக்களுக்கு அரசின் அறிவிப்பு

விலை உயர்வை தாங்க தயாராகுங்கள் : இலங்கை மக்களுக்கு அரசின் அறிவிப்பு

உலகில் விலை உயர்வை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டால், அவற்றின் விலை அதிகரிக்கும் என்று வர்த்தகம்,மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு ஏற்கனவே பதிவாகியுள்ளது, நிச்சயமாக நாம் இந்த அதிகரிப்பை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும், இது ஒரு தடுக்க முடியாத சூழ்நிலை என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை முழு உலகையும் பாதிக்கும் ஒரு சூழ்நிலையாகும், மேலும் கப்பல் வழிகளைப் பயன்படுத்தி இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நாட்டிற்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாகும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.

விலை உயர்வை தாங்க தயாராகுங்கள் : இலங்கை மக்களுக்கு அரசின் அறிவிப்பு | Sl People Have To Bear The Price Increase

  வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"மத்திய கிழக்கின் நிலைமை முழு உலகையும் பாதிக்கும் ஒரு சூழ்நிலையாகும். குறிப்பாக கப்பல் வழிகளைப் பயன்படுத்தி இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நாட்டிற்கும் இது ஒரு பிரச்சனையாகும்.

விலை உயர்வை தாங்க தயாராகுங்கள் : இலங்கை மக்களுக்கு அரசின் அறிவிப்பு | Sl People Have To Bear The Price Increaseஉலக விலைகளின் அதிகரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைக் குறைத்தால், விலைகள் அதிகரிக்கும். ஏற்கனவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் அந்த விலை உயர்வை நாம் நிச்சயமாக ஏற்க வேண்டியிருக்கும். அதை நாம் தடுக்க முடியாது."