நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (22) சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாளை நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனியாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் | Srialnka Weather Report 

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.   

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.