மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி மாதத்திற்குரிய நிதி ஒதுக்கீடுகள் இன்று (12) வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று முதல் பயனாளர்கள் தமது வங்கிக் கணக்கினூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
