மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள்

மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் பணியகம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தாதியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள், NVQ III சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது தாதியர் தொழிலில் குறைந்தது 11 மாத அனுபவம் உள்ளவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை எழுதியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பணியகத்தின் ஆங்கில பாடநெறியை முடித்த மற்றும் நல்ல ஆங்கில மொழித் திறன் கொண்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள் | 1000 Sri Lankans To Israel Home Based Nursing Jobs

இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் விசாவையும், ரூ. 600,000 க்கும் அதிகமான மாத சம்பளத்தைப் பெறும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.

இன்றுவரை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2,656 இலங்கையர்கள் இஸ்ரேலில் தாதியர் வேலைக்கு தகுதி பெற்றுள்ளனர், மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் 107 நிபுணர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.

மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள் | 1000 Sri Lankans To Israel Home Based Nursing Jobs

இந்தப் பதவிகள் மக்கள் தொகை மற்றும் குடிவரவு சேவைகள் ஆணைக்குழுவின் (PIBA) மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்துடன் இணைந்து SLBFE மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன. 

குறித்த வேலைகளைப் பெறுவதற்கு மாற்று வழி இல்லாததால், வேறு எந்த தனிநபர் அல்லது நிறுவனத்திற்கும் பணம், கடவுச்சீட்டு அல்லது ஏனைய ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.