உழவு இயந்திர விபத்தில் சாரதி பரிதாபமாக உயிரிழப்பு

உழவு இயந்திர விபத்தில் சாரதி பரிதாபமாக உயிரிழப்பு

பதுளையில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மடுல்சீமை - பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திர விபத்தில் சாரதி பரிதாபமாக உயிரிழப்பு | Driver Killed In Plowing Accident

விபத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.