காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல்

காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல்

  புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் காதலை துண்டித்த கொலை மிரட்டல் விடுத்த காதலன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய காதலனே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 13 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பணி இடத்தில் இளைஞன் ஒருவருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல் | Boyfriend Issued Death Threats To The Girl

இந்தநிலையில், டிசம்பர் 26 ஆம் திகதி சந்தேக நபரான காதலன் சிறுமி தங்கியுள்ள வாடகை வீட்டிற்குச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் சிறுமிக்கும் சந்தேக நபரான காதலனுக்கும் இடையிலான காதலன் உறவு முறிந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமி மற்றுமொரு இளைஞனுடன் காதலன் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் தனது வாடகை வீட்டில் வைத்து, தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த வாடகை வீட்டின் பெண் உரிமையாளர், இது தொடர்பில் சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாய் இது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான முன்னாள் காதலன் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.