காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்- கொட்டாஞ்சேனையில் சம்பவம்

காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்- கொட்டாஞ்சேனையில் சம்பவம்

கொட்டாஞ்சேனை-அலுத்மாவத்தை பிரதேசத்தில் மகிழூர்தி ஒன்றுக்குள் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த நபர் அதுருகிரிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக இவர் கடமையாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.