நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (09) இனங்காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்களுடன் இந்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும், சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, இதுவரை 2579 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, 251 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.