அதிகாலையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து - பலர் கவலைக்கிடம்

அதிகாலையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து - பலர் கவலைக்கிடம்

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து  இன்று (12) அதிகாலை 3 மணியளவில் கொழும்பு (Colombo) - மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் கோர விபத்துக்குள்ளான பேருந்து - பலர் கவலைக்கிடம் | Bus Accident In Srilanka Today

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து தொடர்பாக மின்னேரியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.