யாழில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர்

யாழில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர்

யாழ். மண்கும்பான் கடற்கரை பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (11.08.2025) இடம்பெற்றுள்ளது. 

கடற்கரை பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் ஊர்காவல்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

ஊர்காவல்துறை பொலிஸாரின் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.