யாழ்.சுற்றுலா வந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்.சுற்றுலா வந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

பின்னர் நேற்றுமுன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

யாழ்.சுற்றுலா வந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு | Buddhist Monk Visiting Jaffna Found Dead

இந்நிலையில் நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.