சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலை தடுக்க எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலை தடுக்க எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலைத் தடுக்கவும், சுற்றுலாச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய சட்ட விதிகளை செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) வாக்குறுதி அளித்துள்ளது.

இலங்கை தேசிய சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றில் நேற்று விசாரணகக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, நீதிபதிகள் எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, SLTDA சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதல் மற்றும் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தனி விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலை தடுக்க எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை | Pledge To Stop Illegal Tourist Guidance

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலைத் தடுக்கவும், 2005 ஆம் ஆண்டு 38 ஆம் எண் சுற்றுலாச் சட்டத்தின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் நிறுவனம் தனது மனுவில் கோரியிருந்தது.

மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியுள்ளார்.