காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.எம். சாண்டர்ஸ், கே.எம்.எஸ்.ஆர். கொடிதுவக்கு, பிரேமலால் ரணகல, சீ.ஈ. எதிரிசிங்க, டபிள்யூ.எம்.எல். வீரசேகர, உபாலி கல்கமுவ, டபிள்யூ.எல்.எஸ். சோமவீர, டபிள்யூ.டி. கொமசாரு, எப்.எஸ்.கே. ஜோசப், பி.சி.ஜே.டி. விஜேவர்தன (இவர் தற்போது உயிருடன் இல்லை) ஆகியவர்கள் ஆகியோர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு | Ex Police Cops Promoted

ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு ஒரே தடவையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டமை வரலாற்றில் முதல் தடவை என பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி உயர்வுகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.