கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம்

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம்

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவின் ரொட்டவெவ காட்டுப்பகுதியில் நேற்று (8) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம் | Woman Picking Curry Leaves Meets Sudden Tragedyஎப்பாவல, ரொட்டவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட, 55 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று ரொட்டவெவ காட்டுப் பகுதிக்கு கறிவேப்பிலை பறிப்பதற்காக சென்றிருந்தபோது கட்டுத்துவக்கு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் எப்பாவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.