
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்: வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், 2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது ஒப்பட்டளவில் 19.42% சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த மாதத்தில் வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத இறுதியில், முதன்மை கணக்கு இருப்பு ரூபாய் 532.73 பில்லியனாக நேர்மறை மதிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை ரூபாய் 261.61 பில்லியனாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.