தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன் | Youth Found Dead Outside Home Shocks Locals

இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.