
மின்சார ஊழியர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை ; சோகத்தில் தவிக்கும் பிள்ளைகள்
களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களுத்துறை, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.