வவுனியாவில் இளம் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! பொலிஸில் தலையுடன் சரணடைந்த கணவன்

வவுனியாவில் இளம் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! பொலிஸில் தலையுடன் சரணடைந்த கணவன்

வவுனியாவில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக கூறி கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

32 வயதான ரஜூட் சுவர்ணலதா என்ற தனது மனைவியை கொலை செய்த நிலையில், அவரின் தலையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து உடலை காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

vavuniya_murder_today   

அதிர்ச்சியடைந்த பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும்,மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

vavuniya_murder_today  

இதன்போதே சின்னப்பூவரசங்குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

vavuniya_murder_today