
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம்
இலங்கையின் உள்ளூர் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) நிறுவனம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை மக்கள் போக்குவரத்துக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு இணங்க, இந்த விமான சேவையினை விருத்தி செய்வதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02.06.2025) இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விசேட கண்காணிப்பு விமானம், பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள விமான சேவையால், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான போக்குவரத்து மேலும் சீராக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.